Description |
சந்தோஷ் ஏச்சிக்கானம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பேட்டுக்காடில் 1971-ல் சந்தோஷ் பிறந்திருந்தாலும் இப்போது வசிப்பது திருச்சூரில். கேரள சாகித்ய அகடாமி, கதா உட்பட பல விருதுகளை தன் படைப்புகளுக்காக அள்ளிக்குவித்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனமும், கதையும் எழுதியுள்ளார். ஏழு சிறுகதை தொகுப்புகள் மலையாளத்தில் வந்துள்ளன. தமிழில் ‘ஒற்றைக்கதைவு’ என்று ஒரு கதைத் தொகுப்பு கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. எந்த அமைப்பிலேயும் இருந்து செயல்படவில்லையெனிலும் தான் ஒரு இடதுசாரி எழுத்தாளன் என்ற பெருமிதமுண்டு என்கிறார். |