Description |
தென்னாடுடைய சிவனை எந்நாட்டவர்க்கும் வெளிப்படுத்தும் இலையில் பூவுலகம் கண்ட அருளாளர்களே நாயன்மார்கள். அவர்களுடைய வரலாற்றினைப் பெரியபுராணம் விரிவாக இயம்பிச் செல்கிறது. சிவன் என்னும் செம்பொருளைப் பாடியும், பரவியும் பெருமை சேர்த்தனர். அவர்களுள் தேவார மூவர் எனப்படும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்போர் குறிப்பிடத்தக்கவர். அவர்களுள் திருஞான சம்பந்தர் முதல்வராக வைத்து எண்ணப் படுகிறார். குழந்தையாயிருந்தபோதே இறைவனைப்பாடி, காளையாய் விளங்கும்போதே கடவுள் திருவடி சேர்ந்தவர். சிறுவராய் இருந்து அதிகம் சாதித்தவர். தேவாரத்தின் முதற் பகுதியான முதல் மூன்று திருமுறைகளைப் பாடியருளியவர். சீர்காழிப் பதியில் பிறந்து சிவஞானப்பாலுண்டு "தோடுடைய செவியன்" எனப் பாடத்தொடங்கி சமண, பௌத்தர்களுடன் வாதம் புரிந்து சைவப்வர் ஞானசம்பந்தர். அவரது காலம் கி.பி.609 முதல் பயிர் வளர்த்த 642க்கு இடைப்பட்ட காலத்தில் 16 ஆண்டுகள் என்பர்.திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை நுண்ணிதின் ஆராய்ந்து முறைப்படி அமைத்துத் திருஞான சம்பந்த சுவாமிகள் சரித்திரம் என நூலாக வழங்கியவர் கா.சு. பிள்ளை எனப்படும் அவர்கள். ஆய்வு உலகில் தனக்கெனத் கா.சுப்பிரமணிய பிள்ளை தனியிடம் பிடித்தவர். இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் ஆழங்கால் பட்டு பல அரிய படைப்புகளைத் தந்தவர். தமிழகத்தின் காசு என அழைக்கப்படுபவர்.திருஞான சம்பந்தரை அறிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும். |