Description |
தொகுப்பில் உள்ள14சிறுகதைகளிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை,அதன் சிக்கல்களை மிக நுட்பமாக உணர்ந்து அதனையே கதைகளின் மையக் கருவாக மாற்றியுள்ளார்.மலைவாழ் மக்களின் அறியாமை,அவர்களைச் சூழந்திருக்கும் வறுமை,அதே நேரத்தில் அவர்களின் துணிச்சல் மிக அழகாகத் கூறப்பட்டுள்ளது.நீதிமன்ற வளாகத்தில்,பெண்கள் குறித்த வழக்குகளும்,வாய்தாக்களும் எத்தனை குவிந்துள்ளனவோ?இந்தக் கேள்வியை ஒரு சிறுகதை நமக்குள் எழுப்பிச் செல்கிறது.சாலையோர வியாபாரம்,சாலையோர மக்கள்,அவர்கள் படும் கஷ்டங்கள்,மகிழ்ச்சி,நம்பிக்கை ஆகியவற்றை ஒரு அழகான மூங்கில் கூடையாகவே பின்னியிருக்கிறார். |