Description |
ஆசைப்பட்ட பொருள் புதையலாகக் கிடைக்கிறபோது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டா?அட!நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் எளிதாகக் கைகளுக்கு எட்டாத புதையல் குழந்தைகளுக்குக் கிடைத்தால் என்னவாகும்?அவர்களுக்கு மத்தியில் குதூகலமும் கொண்டாட்டங்களும் அதிகரிக்கும்.ஆமாம்.உலகப் புகழ்பெற்ற சித்திரக்கதைகள் கதைப் புதையலாக தமிழில் கிடைத்துள்ளன.ஏற்கனவே புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியிட்ட கதைப் புதையல் புத்தகத் தொகுப்புக்கு பெற்றோர்கள்,பள்ளிகள் மற்றும் சிறுவர்கள் தந்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து அண்மையில் கதைப் புதையல்IIஐ(எட்டு சித்திரக்கதைப் புத்தகத் தொகுப்பு)அப்பதிப்பகம் பதிப்பித்தது.தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய சித்திரங்களுடன் எட்டுப் புத்தகங்களும் வெளியாகியுள்ளன.குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.சரி.அப்படி என்னென்ன கதைகள்?வாருங்கள். |