Description |
இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 28 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல் ஆகும்.தமிழ்நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம்.”ஈழத்தில் உள்ள தமிழ்முடியை நாம் வென்று வராவிட்டால் இத்தனை பெரிய சோழ சாம்ராஜ்யத்தை நாம் கட்டி ஆள்வதில் பொருளே இல்லை.மதுராந்தகரே! நம்முடைய முதல் போர் தமிழன் ஒருவனுடைய மணிமுடிக்காக!” என்று தமிழர்களின் வரலாற்றுச் சிக்கல்களையும் மனப்பான்மையையும் இந்நாவலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. |