Description |
மந்தணம் பொதிந்து கிடக்கும் கடலைப் போலவே, கடலோடிகளைப் புரிந்து கொள்வதும் சிக்கலானது. கடலோடி கடலின் வார்ப்பாகவே உருவாகிறான். கடலும் கடற்கரையும் அவர்களுக்கு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலம் அவர்களின் மரபறிவை, இனக்குழு மொழியை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது. கடல்சார் மக்களின் இருத்தலை, செழுமையான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டாடுகின்றன ‘கடல் சொன்ன கதைகள்’. |