Description |
“தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள்.இந்தியாவில்-இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையின் பொருள் காணும் விதமாக அவர் எழுதினார். அடக்கமான தொனியில் பரபரப்பும், ஆர்பாட்டமுமின்றி மன உணர்வுகளுக்கும், உள்ளக் கிளர்ச்சிகளுக்கும் முக்கியமான இடம் கொடுத்து அவருடைய கதைகள் அமைந்தன.” |