Description |
“ராணியின் கனவு” முதலிய பத்து சரித்திரக் கதைகள் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. இவற்றில் சில ஏற்கெனவே "ஒன்பதாவது இரவு” என்ற தலைப்பில் புத்தக வடிவில் வெளிவந்திருந்தாலும், சமீப காலத்தில் வெளிவந்த மற்றும் சில புதிய சிறுகதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாகப் பிரசுரிக்க வானதி பதிப்பகத்தார் விரும்பியதால் இந்தச் சரித்திரச் சிறுகதைத் தொகுதி வெளியாகிறது. இதில் காணப்படும் கதைகளெல்லாம் ராஜபுதனத்தின் வீர புருஷர்களையும், வீரப் பெண்மணிகளையும், கவிஞர்களையும் பற்றியவை. எல்லாம் பூர்ண சரித்திர ஆதாரம் பெற்றவை. ஒவ்வொரு கதையிலும் தோன்றும் கதாபாத்திரங் களைப் போல் தோன்றினாலும் உண்மையில் சரித்திரத்தில் ஜீவித்தவர்கள். இந்தக் கதைகளில் வரும் சரித்திர நிகழ்ச்சி களையெல்லாம் கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthan என்ற ராஜபுதன ஆராய்ச்சி நூலில் காணலாம். டாட்டின் சரித்திரக் குறிப்புகளுடன் கதையம்சத்துக்காகவும், சிருங்காரம், வீரம் முதலிய ரசங்களை விரிவுபடுத்திக் காட்டுவதற்காகவும் சொந்தக் கற்பனையையும் இணைத்து இந்தக் கதைகளை எழுதினேன். |