Description |
ஷமீலாவின் மொழி, மர்மக் கிணறுகளை மறைத்து வைத்துள்ள பச்சைக் கண் பூனையின் மென்மையான சுவடுகளைப் போன்றது. விபரிப்புகளுக்கும் நிசப்தங்களுக்கும் நடுவே எப்போதுமே சொல்ல முடியாத ஒன்றை, தனக்கேயான பிரத்தியேக வண்ண சமிக்ஞைகளில் ஆழ்ந்து உணர்த்தக் கூடியது. பெண் இருப்பை ஷமீலா சில சமயங்களில் கண்ணாடி மீன்கள் என்கிறார். அல்லது இறக்கைகள் கொண்ட பறவை என்கிறார். அவருடைய பாரம்பரியத்திலிருந்து அகழ்ந்து வரும் முத்துக்களால் அவர் உருவாக்குகின்ற கவிதைச் சித்திரங்கள் நவீனமும் தொன்மமும் இரண்டறக் கலந்துள்ளவை. அச்சித்திரச் சுவரின் முன்னே அனைத்திலும் பாதியைத் தொலைத்துவிட்ட நிலையில் மனதின் மாசற்ற பாடலுடன் நிற்பது ஒரு பெண்தான். |