Description |
தமிழ்ச் சமூகம் தம் பெருமையைப் பேசி ஓய்ந்திருந்த காலம். அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழி தெரியாமல் முடக்கம் நேர்ந்திருந்த சமயம். அரசியல் ரீதியாகப் பின்னிழுக்கும் பழமைவாதச் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை. எல்லாவற்றிலும் ஒரு தேக்கம். இச்சூழலில் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் தடைகளை உடைத்துப் பெருகும் புதுவெள்ளம் போல் வந்து சேர்ந்துள்ளன. இவ்வாய்வுகள் தமிழ்ச் சமூகத்துக்குத் தார்மீக பலத்தைத் தருகின்றன; எதிர்கொள்ள அறிவாயுதத்தை வழங்குகின்றன. ஆய்வுலகுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தளத்திலும் நம்பிக்கையை விதைக்கின்றன. |