Description |
ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நேசிக்கும் உள்ளம் நம்மில் அனைவருக்கும் உண்டு. ஆனால், அவனுடைய நேசத்தை அடைகின்ற தகுதியில் இருக்கின்றோமா என்பது கேள்வி. ஏனெனில், அவனுக்குக் கீழ்ப்படியாமல் மாறுசெய்கின்ற வாழ்க்கையில் உழல்கிறோம். அவன் நினைத்தால் உடனுக்குடன் நம்மைத் தண்டிக்க முடியும். அவனோ தன்னுடைய கருணையால் நம்மை விட்டுவைத்திருக்கிறான். இது நாம் அவனிடம் திரும்பி மன்னிப்புக் கேட்டு, அவனுடைய நேசர்களாக மாறுவதற்கான அவகாசம்தான். இப்போது நாம் செய்ய வேண்டியது, அல்லாஹ்வின் நேசத்தை அடைவதற்கான பாதையில் அடியெடுத்துவைத்து பயணிப்பதே. இதற்கோர் எளிமையான, சுருக்கமான குறிப்பேடுதான் இது. |