Description |
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியானது. ஒரு தேர்ந்த வாசக மனம் இவை அனைத்திற்குமான ஊடுபாவு ஒரே ஒரு மாயக்கயிறு என்பதை வாசிப்பின் தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிடும். - ஜனமித்திரன், முன்னுரையில் ஒதுங்கி நின்று, அலட்சியமும், தெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, புரிந்து, கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை. |