Description |
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூல்களையும் எழுதினார். அவர் எழுதிக் குவித்தவற்றை உடனடியாக வெளியிட இயலவில்லை.இதற்கிடையில் ஸ்பானிய நாட்டில் பாசிச நெருக்கடி உருவாயிற்று.பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாசிச எதிர்ப்புப் போராளிகள் ஸ்பானிய நாட்டுக்கு விரைந்தனர்.காட்வெல்லும் பிரிட்டிஷ் கட்சியின் பிரதிநிதியாக ஆயுதமேந்தி ஸ்பெயினுக்குச் சென்றார்.போர்க்களத்தில் அவர் அதிக காலம் போராட முடியவில்லை 1937 ல் அப்போது அவருக்கு 29 வயது,அவர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இறந்த அவரது உடலைக்கூட தோழர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. அவரது எழுத்துகள் மார்க்சிய சிந்தனையில் கற்றுத் தேறியவையாக உள்ளன என்பதைக் கண்டறிந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள்,அவரது இழப்பு எவ்வளவு பெரியது என்பதை அப்போதுதான் உணர்ந்தனர். அவரது நூல்களை ஒழுங்கமைத்து வெளியிடும் முயற்சியில் பிரிட்டிஷ் மார்க்சியர்கள் ஈடுபட்டனர். இன்றுவரை சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அவரது நூல்கள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன. |