Description |
தமிழிலும் மலையாளத்திலும் கொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பி.உஷாதேவியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு. நிராதரவானவர்கள், குடும்பங்களில் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், அன்பினை உணரா குழந்தைகள் என உஷாதேவியின் கதைகளுக்குள் அடியோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு துயர நதி. அடங்கிய குரலில் அவர் கதை சொல்லிக்கொண்டு செல்லும் தொனி, அந்தத் துயரத்தை மேலும் கனமாக்கும். |