Description |
ஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர்களுக்குள் உடல் உறுப்பு மாற்றம் மட்டுமே உண்டு என்பார்கள். அந்த உடல் உறுப்பு மாறுபாட்டையும் கூட கேள்வி கேட்டவர்கள் பெண் உரிமைச் சிந்தனையாளர்கள். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்ணியம் என்று பேசப்படும் வார்த்தைகள் எப்போது உருவானது, எப்படி உருவானது, இதனை முன்னெடுத்த மனிதர்கள் யார் என்ற வரலாற்றுத் தகவல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். |