Description |
எங்கிருந்தோ வந்த கொடும்பறவைகள் மகிழ்வோடு வேட்டையாடுகின்றன நிலத்தின் சிறுபறவைகள் சிறகுகள் இழந்த சிறுபறவைகள் கனவுகளை பொந்துகளில் செருகி வைத்திருக்கின்றன வாழ்வெனப்படுவது நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது வெறும் நிலத்தில் சிறகிழந்த பறவைகள் மேலலைய வீழ்ந்த மரத்தின் சருகாகிப்போன இலைகள் கீழலைகின்றன |