Description |
சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று. 740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன. நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது. இருப்பினும், பட்டினி , சத்துப் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். நீர் , உணவு , உடை உடை ,வீடு ,கல்வி ,மருத்துவம் , வேலைவாய்ப்பு,சொத்துடைமை,இயற்கை வளங்கள் மீதான உரிமை ஆகிய அனைத்திலும் ஏற்றதாழ்வுகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றன. புவி வெப்பமடைகிறது , பருவநிலை மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்கின்றன ,வறட்சி கடுமையாகிறது, நிலம் , நீர், காற்று ஆகியன வேகமாக மாசடைந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காண உயிரின வகைகள் உலகிலிருந்து அழிந்தொழிகின்றன. வரம்பற்ற நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை , அதற்குச் சாதகமான அரசியல் முறைமை , பிற படிநிலைக் கூம்பக முறைமைகள் ஆகியன இந்த இழிநிலைக்குக் காரணங்கள். ஏன் ? எப்படி ? இந்த இழிநிலையை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதை எப்படிச் செய்வது ? இவற்றைக் குறித்து இந்நூலில் பார்க்கலாம். |