Description |
குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இந்தநாவலின் வெற்றி. குறிப்பாக காசீம் சுவற்றில் விழும்போது அந்த சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர முற்படும் இடம் மனதை வலிக்கச் செய்கிறது. கதை முழுதும் வலி சுமக்கும் பிம்பங்களை முன்னிறுத்தி நகர்த்துகிறார். அவர்களின் வாழ்நிலை குறித்த பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. |