Description |
“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது. பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல்லாடல்கள் மேலும் செழுமைப் படுவதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் என்று பதிப்புரையில் மகரந்தன் மொழிவது மிகவும் சரி. |