Description |
இந்தியப் பண்பாட்டில், மக்களின் வாழ்க்கையும் வாழ்வின் நடைமுறைகளும் விவசாயத்தோடு இணைந்துள்ளதாகக் கருதப்படுகின்றன. பண்டைய விவசாய முறைகளில், ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வெப்பமான வானிலையில் குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு விவசாயிகள் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். இன்றைய வேளாண்மை, ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ரசாயனங்களின் நஞ்சுத் தன்மையுடைய விளைவுகளிலிருந்து விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். |