Description |
தாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது. நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அதிகரிப்பு, புதிய கடவுளரின் உருவாக்கம், பூசாரிகளின் தேவை அதிகரிப்பு ஆகிய வற்றைக் கண்டுள்ளன. அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களில் பூசைகளையும் யாகங்களையும் கால ஒழுங்கோடு பயன்படுத்த முற்பட்டுவிட்டதால், இந்து மதமும் பொதுவாழ்க்கையில் நுழைந்துவிட்டது. |