Description |
ஐம்பதுகளில் எழுத துவங்கிய ஜேகே தனக்கான விரிந்த வாசகஉலகைக் கொண்டிருந்தார். பத்ம பூஷண் விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், அத்துடன் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீடம் உள்ளிட்ட முக்கிய விருதுகள் பலவற்றை பெற்றிருக்கிறார், இப்படி தான் வாழும் காலத்திலே சகல கௌரவங்களையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரே படைப்பாளி ஜெயகாந்தன் மட்டுமே. அவரது மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கிய கட்டுரைகள் இந்ததொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அதுபோலவே எழுத்தாளர்கள் மௌனி, கிரா பிரமீள் பற்றியும், விமர்சகர் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக்கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும் சமகால பண்பாடுப்பிரச்சனைகள் குறித்தும், எழுதிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. |