Description |
தீர்க்கமான பெண்ணியவாதிகள் முற்போக்குச் செயல்பாட்டாளராகவும், சமூக அக்கறையாளராகவும் தானாக மாறிவிடும் இயல்பை இவரது ஒவ்வொரு வரியிலும் உணரலாம். முற்போக்குப் படைப்பாளிகளின் உரிமைக்குரல்கள் நெரிபடும் இன்றைய அபாய காலகட்டத்தில் நர்மதா போன்றவர்கள் உயரத்தூக்கிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உண்மையில் இக்கவிதைகளுக்கு எந்த உறைகல்லும் தேவையில்லை. அவரது முகநூல் பக்கத்தில் வெளியாகி ஏற்கெனவே நூறு நூறு விருப்பங்களை அள்ளிச் சேர்த்தவை. படித்து முடித்து நீங்களும் விரும்பி நிமிர்வதற்குள் நர்மதா அடுத்த படைப்போடு காத்திருப்பார். சீக்கிரம்.. சீக்கிரம்! |