Description |
ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவனை பிரதான பாத்திரமாகக் கொண்டு ஈழப்போரைப் பேசும் நாவல் நடுகல். துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஆக்கிரமிப்பாளர்களின் குரல்களும் மாத்திரம் எங்களை இனப்படுகொலை செய்யவில்லை. எங்களுக்கு எதிரான புனைவுகளும் எங்களை கொலை செய்தன. வன்புணர்ந்தன. எங்கள் குரல்களை நசுக்கின. நாம் எப்படி வாழ்ந்தோம்? எதை விரும்பினோம்? எவை எம் கனவுகள்? குழந்தைகளின் பார்வையில் போரையும் வழ்வையும் பேசும் இரு சிறுவர்களின் கதையே ‘நடுகல்’. |