Description |
காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக் கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன். காவிரி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் வரையிலும், இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள், வளர்ந்த நாகரிகம், விவசாயம், மக்கள், ஊர்கள், போர்கள், படுகொலைகள், இலக்கியப் பதிவுகள், கல்வெட்டுப் பதிவுகள் என எதையும் மீதம் வைக்காமல், எல்லாவற்றையும் தனது எழுத்துக்குள் கொண்டு வந்துள்ளார். காப்பியங்களிலும், புராணங்களிலும் விரிவாகப் பதிவாகி இருந்தாலும், காவிரி வளர்த்ததும், காவிரியால் வளர்ந்ததுமான மக்கள் சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பிரதியாக, காலத்தின் சாட்சியமாக இந்நூல் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. |