Description |
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள், கு.அழகிரிசாமியின் சிரிக்கவில்லை, மெளனியின் அழியாச் சுடர், நகுலனின் வெயில், கி.ராவின் கன்னிமை, பிரபஞ்சனின் மாமன் வரவு, ஜெயந்தனின் வயது பதினாறு, பா.செயப்பிரகாசத்தின் ஆறு நரகங்கள், வண்ணதாசனின் தனுமை, ச.தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய், கோணங்கியின் திருவாரூர் ஜட்காவும் இவர்களும், எஸ்.ராமகிருஷ்ணனின் கழுவேற்றம், ஜெயமோகனின் நிழலாட்டம், கோபி கிருஷ்ணனின் வார்த்தை உறவு, இரா. நடராசனின் பால் திரிபு, லக்ஷ்மி மணிவணணனின் ஜெயாவும் சவுந்தர பாண்டியனும் உதய சங்கரின் பால்ய சினேகிதி, அழகிய பெரியவனின் நெரிக்கட்டு. அஜயன் பாலாவின் மழைக்காலக் கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும் வா.மு.கோமுவின் டெய்ஸி டீச்சர், எஸ்.செந்தில்குமாரின் பெயரிடப்படாத சம்பவம், சந்திராவின் நதியில் மிதக்கும் கானல், கீரனூர் ஜாகிர்ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு ஆகிய கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. உண்மையில் தமிழில் காமம் பேசப்பட்ட அளவுக்கு காதல் பேசப்படவில்லை என்றும் தமிழில் காதல் சிறுகதைகள் குறைவுதான் என்றும் பாரதி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார். இந்தக் காதல் சிறுகதைகள் வெளிப்படையாகவும் நுட்பகமாகவும் கூறப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் காதல் வெளியில் பூத்த மலர்கள்தான். இவற்றை ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போது எத்தனை விசித்திரங்கள், அதேசமயம் எத்தனை ஸ்டீரியோடைப்கள்… |