Description |
முந்தைய கவிதைகளின் சொல்முறையிலும் விஷயத் தேர்விலும் இருந்தும் வெகுதூரம் விலகி இருக்கிறார் தமிழ்மணவாளன்.வாழ்வின் அபத்தங்கள்,மொழியையும் தடுமாறச் செய்து அபத்தமுறச் செய்கிற நிர்பந்தங்களைக் கவனம் கொள்கிறார் அவர்.அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இல்லை நிகழும் சம்பவங்கள்,மற்றும் தம்மை வெளிப்படுத்தும் மனித மொழிகள்.நவீன வாழ்க்கை,மொழியை மேலும் இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்லுகிற வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன தமிழ்மணவாளன் கவிதைகள். |