Description |
உலகமே கதைகளின் வழியாகத்தான் எனக்கு அறிமுகனாது. தந்திரக்காரத்திருடர்களும், சித்திரக் குள்ளர்களும், சூனீயக்காரிகளும், ஒற்றைக் கண் மந்திரவாதிகளும், எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களும், ஆறு தலைப் பன்றிகளும் எனப் பலரும் கதைகளின் மூலம் எனது நினைவுப்புலத்தில் மிதந்தனர். வானத்தில் பறந்து போகும் பறவையின் நிழல் தரையில் விழுவது போல், புனைவின் வாசம் இருக்கிறது. முடிவற்ற புனைவுகள் மனதுக்கு ரம்மியமளிக்கின்றன. அப்புறம் ஒருபோதும் விட்டு விலக முடியாத புனைவுப் பள்ளத்தாக்கினுள் விழுந்துவிட்டேன். இன்றுவரை புனைவுலகில் பயணிப்பதிலிருந்து விடுபட முடியவில்லை. - ந.முருகேசபாண்டியன் |