ஒரு படைப்புக்குள் நுழைவது இன்னொரு வாழ்வுக்குள் நுழைகிற அவஸ்தைகளையும் சாகச உணர்வையும் அளிக்கக்கூடியது. மொழியின் புதிருக்குள் அதைத் தேடும்போது, நமது எழுத்தே நமது வாழ்வுக்கான புதிய வெளிச்சத்தைத் தருவதாகவும் மாறிவிடுகிறது.