Description |
சாரு நிவேதிதா தனது கதைகளின் வழியாகச் சித்தரிக்கிற புனைவுலகு, சவால் நிரம்பியது. இவரின் கதைசொல்லலில் சுயபகடியும், அங்கதமான விவரிப்பும் கருப்பு நகைச்சுவையும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. இக்கட்டான சூழலில்கூட விலகி நின்று தன்னை அந்நியனாக பாவித்துச் சொல்லப்பட்டுள்ள மொழியிலான இந்தக் கதைகள் வெளியெங்கும் மிதக்கின்றன. |