Description |
இந்தக் கவிதைகளின் சுகமான சாரலில் உயிர்வரை நனைந்துபோவது உன்னத அனுபவமாகும். அதேபோல் இங்குள்ள மின்சாரக் கவிதைகளை மெல்லிசை நடையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருப்பதும், திசைகளுக்குத் தீனி போடும் திருப்பணியாகும் மொத்தத்தில் இந்த நூல், மார்கழி மாதத்து முத்த ஒத்தடம் போல் கிறங்கவைக்கிறது. என்றாலும் இது புலன்களை விழிக்கவைக்கும் புதுவித கிறக்கம். போட்டியாளர்கள் இன்றி ஒவ்வொரு படைப்பிலும் தன்னைத் தாண்டியே ஓடிக்கொண்டிருக்கும் கவித்தாசபாபதி, இந்த நூலிலும் அசுரபலம் காட்டியிருக்கிறார். அமரகவிஞன் நா.காமராசனின் திருமுகத்தை இவர் முகத்தில் அடையாளம் காணத் தொடங்கிவிட்டது தமிழிலக்கியம். |