Description |
நாவலில் வருகின்ற சுகவனத்தின் அமைதி வாசகர்களுக்குக் வாழ்க்கை மீதான கேள்விகளுக்குப் பதிலாகவும் சராசரி மனிதன் தனிமையில் கடக்கும் முதுமையின் புலம்பல்களை உணர்ந்த மனநிறைவையும் நிச்சயமாக தரும். பெருத்து கிடக்கும் நகரமய வாழ்க்கையில் ஒரு புள்ளியாகவாது வாழ்ந்திருக்கோம் என்பதற்கு அடையாளமாய் நினைவுகள் மட்டுமே சாட்சிகளாக கணக்கின்றன. நில உருவம், சுற்றி இருந்த கட்டடங்கள், சாலையில் பயணித்த வாகனங்கள், கதை பேசிய மனிதர்கள் கால போக்கில் நாட்டின் வளர்ச்சிக்காக காணடிக்கப்பட்டப் பின் மீண்டும் அவற்றைத் திரும்பி பார்க்கையில் அங்கு கற்பனைகள் மட்டுமே மிஞ்சியாய் நிற்கின்றன. |