Description |
கதை சொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழை மட்டையில் உட்கார வைத்து பளிங்குத் தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் லட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். கதைகளைப் படித்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். ஊர் மிளைக்காகவும், லட்சுமியம்மாவுக்காகவும் கண்ணீர் சிந்தினேன். |