Description |
தேடலும் கண்டடைதலுமே வாழ்வின் சாராம்சம். இதை உணர்ந்தவன் கலைஞனாகிறான். தன்னுடைய தனித்துவமிக்க சிறுகதைகளின் மூலம், வாழ்வின் உன்னதத் தருணங்களைக் கலையனுபவமாகத் தீற்றிய பவாசெல்லதுரை, இத்தொகுப்பின் மூலம் தன் எழுத்தின் எல்லையை விரிவுபடுத்தி புனைவின் வர்ணங்களையும், உரைநடையின் தர்க்கத்தையும் கலந்து புதிய சித்திரங்களாக, மனதை உருகவைக்கும் அற்புதக் கலைப்படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் அனுபவம் ததும்பி தன்னையே தருவதற்குத் தயாராக இருக்கிறது. கிளர்ச்சியூட்டும் முதல் முத்தத்தின் பரவச உணர்வு நம்மில் தங்குகிறது என்கிறார் இத்தொக்குப்பிற்கான முன்னுரையில் எழுத்தாளர் உதயஷங்கர். |