Description |
என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவெச்ச மாதிரி, என்னையே ’சுளீர்’னு திருப்பி அடிச்சிருக்கு.சில உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான். பிரகாஷ்ராஜ் ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது. |