Description |
பனைமரச்சாலை என்பது ஒரு போதகரின் பனை மேலுள்ள விருப்பத்தால் நிகழ்ந்த ஒரு புனித பயணம். தான் பணி செய்யும் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியின் சாகசம். நமது பொது விழிகளிலிருந்து மறைந்துபோன பனையும் பனைசார்ந்த கலாச்சாரமும் பிரம்மாண்டமாக மீண்டெழும்படியாய் பதிவிடப்பட்டிருக்கிறது. அவர் பயணித்த புல்லட்டின் சீரான வேகம் வாசரையும் தொற்றிக்கொள்ளும். பிறிதொன்றினையும் சாராத தனித்த அனுபவங்கள் மூலம் இப்புத்தகம் ஒரு ஆன்மீக தேடலை நிறைவு செய்கிறது. |