Description |
தலித் இலக்கியங்கள், ஈழ இலக்கியங்களில் பெரும்பாலானவை அகவுலகிலிருந்து வெளியேறி சமூகத்துடனான முரண்பாடுகளைக் கையாண்டன. சாதி, மதம் கடந்த பொதுச் சமூக நிறுவனங்களுடனான முரண்பாடுகள் இலக்கியத்தில் மிகச் சொற்பமாகவே வந்திருக்கின்றன. தீவிர இலக்கியத்துக்கான கூறுகளின் வெளிப்பாட்டோடு புறவுலக முரண்களைப் பேசும் தமிழ் நாவல்கள் அபூர்வம். அந்த அபூர்வங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது, அழகிய பெரியவன் எழுதி சமீபத்தில் வெளியான ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவல். |