Description |
குறுந்தொகையின் முதல் முந்நூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை மூன்று தொகுதிகளாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து வெளிவரும் இந்த நான்காம் தொகுதியில் பாடல் 301 முதல் 400 வரை உள்ள குறுந்தொகை பாடல்களுக்கான நவீன தெளிவுரை இடம் பெறுகிறது. அகப்பாடல்களின் வசீகரத்தில் அவற்றின் ஆழமும் விரிவும் தேடி அலைகிறது திருவேந்தியின் அகமனம் என்பதற்கு அவரது உரைவளம் சான்று. |