Description |
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீராநதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடர மட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது. - வண்ணதாசன் நவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத் தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது. கவிஞர் சிற்பி. பாலசுப்ரமணியம் |