Description |
தனது இருக்கையில் வந்தமர்ந்த பயணியைப் போல் சட்டென்று நம்மை ஆட்கொள்கின்றன மதியழகனின் கவிதைகள். அக்கறை, பொறுப்பு, அழகு இன்னும் சில சொற்றொடர்களைப் பொருத்திப் பார்க்காமல் தனக்கே உரிய முழுச் சுதந்திரத்துடன் கவிதையில் பயணம் மேற்கொண்டிருப்பதுதான் மதியின் நடை. சில கவிதைகளில் தலைப்புகளைத் தவிர்த்ததற்குக் காரணமும் இதுதான். மதியழகனின் வார்த்தையில் ‘மௌனம் சொற்களின் புதையல்...’ |