Description |
கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்கிறார். இது ஓர் அறைகூவல். ஒரு மரபின் தொடர்ச்சியாகும்போதே அதிலிருந்து வெளியேறியும் கச்சிதமான வடிவத்துக்குள் இயங்கும்போதே அதைக் கலைத்துப்போட்டும், விழுமியங்களைச் சொல்லும் தோரணையிலேயே அவற்றை விமர்சித்தும் இந்த அறைகூவலை வெற்றிகொள்கிறார். |