Description |
வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் சு. ரா. எழுதிவந்த பத்தி, அதன் தலைப்புக்கு ஏற்ப விசாலமான பார்வையும் அழகுணர்ச்சியும் கொண்டதாக அமைந்திருந்தது. கணம்தோறும் மாறிவரும் இந்த வாழ்வு குறித்த தீராத வியப்பையும் விசாரணையையும் பகிர்ந்துகொள்ளும் சு. ரா., வாசகருள்ளும் வியப்புணர்வையும் விசாரணையையும் தூண்டிவிடுகிறார். |