Description |
கண்ணன் எழுதிய சிறிதும் பெரிதுமான கட்டுரைகள் மிகவும் முக்கியமான வரலாற்றுக் காலகட்டம் ஒன்றில் வெளியாகின்றன. இக்கட்டுரைகள் ஆய்வுக்கும் விளக்கத்துக்கும் எடுத்துள்ள நிகழ்வுகளும் பொருளும் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகின் பிற பாகங்களுக்கும் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியனவாகவும் அமைகின்றன. இத்தகைய பொருத்தப்பாடு, ஒருவகையில், தேசவெளிகளைக் கடந்து, நாமெல்லோரும் உலகமயமாதல் என்ற பெருங்கண்ணியில் சிக்குண்டிருப்பவர்கள் என்கிற யதார்த்தத்தையும் சுட்டி நிற்கிறது என்றும் சொல்ல முடியும். பெரும்பாலான கட்டுரைகளில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்தும் பேசப்படுபவை நமது காலகட்டம் பற்றிய ஒரு விளக்கச் சித்திரத்தைத் தருகின்றன. |