Description |
இளைய அப்துல்லாஹின் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களே கட்டுரைகளின் பேசுபொருள். ஓர் அகதியாக லண்டனில் குடியேறி இன்று ஊடகப் பணியாளராகச் செயல்பட்டுவரும் கட்டுரையாசிரியர் லண்டன் என்ற கனவு தேசத்தின் இருவேறு இயல்புகளை முன்வைக்கிறார். மேற்கு உலகைச் சேர்ந்தவர்களின் லண்டன் காட்சி ஒளி நிரம்பியது. உற்சாகமளிப்பது. கிழக்குத் திசையை சேர்ந்தவர்களின் லண்டன் நாட்டம் இருள் படிந்தது. துயரம் தருவது. இழப்புக்கும் இருப்புக்குமான மையப் பிரதேசத்திலிருந்து இந்த இருவேறுலக மனிதர்களை எந்த மேற்பூச்சும் இல்லாமல் காட்டுகிறார். இந்த நூலின் கட்டுரைகளில் புன்னகை செய்யும் கண்ணீர்த் துளிகளையோ அழுகையில் உறைந்த சிரிப்பையோ வாசகன் காணலாம். |