Description |
இவை நகரமும் இல்லாது கிராமமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் திகழும் குருநகர் என்னும் கடலோரப் பிரதேசத்தைச் சுற்றிக் கவியும் கவிதைகள். வடக்கு கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வியாபித்துக் கொண்டு வரும் இராணுவப் பயங்கர வாதத்தை வெளிக்காட்டி மௌனித்து நகரும் கவிதைகள். தன் சொந்த மண்ணில் தான் வாழ்ந்த காலங்களை, துயரும் மகிழ்வும் தரும் அக்காலங்களை, ஒருவகை ஸீஷீstணீறீரீவீநீ தன்மையோடு மீடடுப் பார்ப்பன போன்ற கவிதைகள். தன் ஆத்மார்த்த பார்வையைப் படரவிட்டு அவற்றின் ஒளியில் தன் விடுதலை எழுச்சிக்குப் பலம் தேடும் கவிதைகள். இந்நான்கு வகைக் கவிதைகளின் சங்கமிப்பே புஷ்பராஜனின் இந்தக் கவிதைத் தொகுப்பு. |