Description |
சசிகலா பாபு கவிதைகள் பெண் உடலை அடைவதற்கான பெண் மொழியை இதுகாறும் செய்யப்பட்டுவந்த ஆண்மொழியைப் பகடி செய்வதன் மூலம் அடைகின்றன. விளைவாக இடதுவலது மாற்றம் பெறாத ஒரு ஆடிப்பிம்பத்தைப் பார்க்கிற அதிர்ச்சியை வாசிக்கிற ஆண்கள் மத்தியிலும் ஆண்மொழிக்கு பழக்கப்பட்ட பெண்களிடத்திலும் உருவாக்குகின்றன. தன்னை ஒரு உடல் உறுப்பாக ஆண் காண்பதிலிருந்தும் தான் காண்பதிலிருந்தும் ஒரு பெண் மீளும் பயணத்தை சசிகலாவின் கவிதைகள் சித்தரித்திருப்பதைப் போன்று இவ்வளவு நுணுக்கமாக விவரித்திருக்கும் கவிதைகள் சமீபத்தில் வரவில்லை. ஒருவகையில் இந்தக் கவிதைகளின் உச்சம் என சசிகலாவின் கவிதைகளைச் சொல்லலாம். - போகன் சங்கர் |