Description |
கவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல் கவிதை நகர்கிறது. கற்பனையாக , காட்சியாக , மனசாட்சியாக , தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக , குற்ற உணர்வாக , உருவகமாகவும் , படிமமாகவும் அமையும் இக்கவிதைகள் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன எளிமையாகவும் பூடகமாகவும் கூழாங்கல்லாக மாற விரும்பும் ஒரு பைத்தியத்தின் சின்னஞ்சிறு புன்னகையே இக்கவிதைகள். |