Description |
வலி நிறைந்த கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கவிதைகள் இவை. மெல்லிசை அழிந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார் ரிஷான் ஷெரீப். சமகாலத்து ஈழக் கவிஞர்களில் தொடர்ந்து எழுதுபவரும் அதனாலேயே கவனத்தைக் கோருபவருமான ரிஷானின் 56 கவிதைகள்கொண்ட இந்தத் தொகுப்பு இன்றைய ஈழக் கவிதையின் திசை காட்டியும் கூட. ‘ஒவ்வொரு துகளும் செஞ்சாயம் பூசிக்கொள்ள நிலத்திலும் மணலிலும் ஊர்கிற கருங்குருதிக் கிடையிலும்’ மனிதனின் வாழ்வியல் வாஞ்சையை அழுத்தமாகச் சொல்லுகின்றன இந்தக் கவிதைகள். |