Description |
2007இல் எழுதத் தொடங்கிய பா. திருச்செந்தாழையி¢ன் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் உணர்வோட்டங்கள், உரையாடல்கள், புதிரான நடத்தைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கைகளை, தடுமாற்றங்களை, கற்பிக்கப்பட்டுள்ள ஒழுக்க மீறல்களை, குற்றவுணர்வுகளை, மனிதநேயம் துளிர்விடும் தருணங்களை ஆசிரியரின் குறுக்கீடின்றி வாசக மனங்களில் அழுத்தமாகப் பதியவைக்கும் வித்தியாசமான கதைகள் இவை. |