Description |
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப் பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது . . . அவருடைய சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.” |